திருவையாறு

தஞ்சாவூருக்கு வடக்கே 11 கி. மீ. தொலைவில் உள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று. திருநாவுக்கரசருக்கு சிவபெருமான் கயிலாயக் காட்சி அளித்த தலம். திருவையாற்றுக்கு அருகில் உள்ள அந்தணக்குறிச்சி என்ற கிராமத்தில் பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நந்திதேவர் அவதரித்தார். சிவபெருமான் அவரை வரவழைத்து அபிஷேகம் செய்வித்து 'அதிகாரநந்தி' என்று பட்டம் சூட்டி அவரிடம் காவல் பொறுப்பை ஒப்படைத்தார். சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று திருமழபாடியில் நந்திதேவருக்குத் திருமணம் செய்து வைத்தார். இதையொட்டியே சப்தஸ்தானத் திருவிழா நடைபெறுகிறது. இறைவன் உமாதேவியாருடனும், நந்திகேஸ்வரர் அவரது துணைவியாருடனும் திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஆறு தலங்களுக்கும் சென்று வருவர்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com